சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையால் மின் விநியோகம் பாதிப்பு
சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையால் மின் விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் கடும் அவதி!
தேனி மாவட்டம், சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இன்று மதியம் 1.30 மணி முதல் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், மழை நேரத்தினால் மின் விநியோகம் தடைபட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இருப்பினும், மின்தடை ஏற்பட்டதற்கான சரியான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இன்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளாக இருப்பதால் பள்ளிக் குழந்தைகள், அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் வீடுகளில் உள்ளனர். இந்நிலையில், நீண்ட நேரமாக மின்சாரம் இல்லாததால் வீட்டு உபயோகப் பணிகள், குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட அன்றாடச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், சின்னமனூர் மின் பகிர்மான வட்டத்தின் கீழ் உள்ள பிற பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலும் இதேபோன்று மின் விநியோகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்தடை நீடித்து வரும் நிலையில், மின்சார விநியோகம் எப்போது சீராகும் என்பது குறித்து பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, மின் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சபரி - சின்னமனூர் நகர செய்தியாளர்