கேரளாவில் கனமழை தீவிரம்: 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று 9 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் தாக்கத்தால் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தச் சூழலில், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.