காவிரி அணைகளை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு: டி.கே.சிவக்குமார் தகவல்
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த டெல்லி சென்றுள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், நேற்று கர்நாடக பவனில் சட்ட நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பிறப்பித்துள்ள உத்தரவைத் தொடர்ந்து, அதற்கு எதிராக கர்நாடகம் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநிலத்தில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லாத சூழலை கருத்தில் கொண்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்குமாறு ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளதாக கூறினார். இந்த முடிவு, அட்வகேட் ஜெனரல், சட்ட நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டதாகவும், மேல்முறையீட்டுக்கான வரைவு அறிக்கை தற்போது தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்மேலும், தமிழக முதல்-அமைச்சர் விஜய் தம்மை நேரில் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துக் கர்நாடக தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருப்பதுடன், தொலைபேசியிலும் தொடர்புகொண்டதாக அவர் கூறினார்.