7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு தங்கம்; தமிழ்நாட்டு வீரர் அப்துல் ஹபீஸ் சாதனை
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வரும் 12-வது ஆசிய வயது பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல் ஹபீஸ், 200 மீட்டர் பட்டர்ப்ளை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய வயது பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த வீரர் என்ற பெருமையை அப்துல் ஹபீஸ் பெற்றுள்ளார்.மேலும், 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் களமிறங்கிய எம்.எஸ்.
நிதீஷ், ஆசியாவின் முன்னணி நீச்சல் வீரர்களுடன் கடுமையாக போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையில் மேலும் ஒரு பதக்கத்தை அவர் சேர்த்தார்.