Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 19 செப்டம்பர் 2026 | 3 புரட்டாசி பராபவ வருடம்

மலேசியாவில் படிக்கும் மாணவன் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் விடுவிப்பு

மலேசியாவில் படிக்கும் மாணவன் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் விடுவிப்பு

மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசனுக்கு அயலக உயர்கல்வி உதவித்தொகையின் கீழ் ரூ.23.95 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வித் திட்டத்தின் கீழ், மலேசியாவில் திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் படிப்பை பாரதிதாசன் மேற்கொண்டு வருகிறார். தனக்குக் கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என்றும், இதனால் சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் கடன் பெற்று தனது ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்து வருவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாணவர் பாரதிதாசனுக்கான கல்வி உதவித்தொகை தொடர்பாக சமூக நீதித்துறை சார்பில் அவ்வப்போது விளக்கங்கள் அளிக்கப்பட்டு வந்தன. செப்டம்பர் 17-ம் தேதியும் மாணவருக்கான இரண்டாம் ஆண்டு கல்வி உதவித்தொகை தொடர்பாக துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, பாரதிதாசனின் படிப்புக்கு தமிழக அரசு முழுமையான உதவியை வழங்கும் என்று தெரிவித்தார்.

Advertisement
மூளைத் திசுக்கள் தொடர்பான பி.எச்.டி. ஆராய்ச்சியை தமிழகத்தைச் சேர்ந்த அவரே மேற்கொண்டு வருவதாகவும், அவர் தனது படிப்பை வெற்றிகரமாக முடித்து தமிழகம் திரும்ப வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றும் கூறினார். மேலும், நடப்பாண்டுக்கான ரூ.6 லட்சம் கல்விக் கட்டணம் மற்றும் ரூ.6 லட்சம் வாழ்வாதார உதவித்தொகை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆராய்ச்சிக்குத் தேவையான பொருட்களுக்கான நிதியையும் மாணவர் கேட்டுள்ள நிலையில், அந்தத் தொகையும் ஓரிரு நாட்களில் சென்றடையும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மலேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு மேற்கொண்டு வரும் பாரதிதாசனுக்கு அயலக கல்வி உதவித்தொகையாக ரூ.23.95 லட்சம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கல்விக்காக ஏற்கனவே ரூ.12 லட்சம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதல் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது. கல்வி நிதி கிடைக்கவில்லை என மாணவர் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தமிழக அரசின் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தற்போது இந்த நிதி விடுவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு