திடீரென உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை.. அதிர்ச்சியில் உறைந்த நடிகை
திரைப் பிரபலங்களை சந்திக்கும் ஆர்வத்தில் சில ரசிகர்கள் சில நேரங்களில் எல்லை மீறி நடந்து கொள்வது உண்டு. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அத்தகைய சம்பவம் அரங்கேறியுள்ளது.பாலிவுட் நடிகை நிகிதா ராவல், மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார். விழா நிகழ்ச்சியில் சிவப்பு கம்பள வரவேற்பின்போது, புகைப்படக் கலைஞர்களுக்காக அவர் பல்வேறு போஸ்களை கொடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ரசிகை ஒருவர், நிகிதா ராவலுடன் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் எதிர்பாராத விதமாக நடிகையின் கன்னத்தில் முத்தமிட்டார்.
இதைத் தொடர்ந்து, அந்த ரசிகை திடீரென நிகிதா ராவலின் உதட்டிலும் முத்தமிட்டார்.எதிர்பாராத இந்த செயலால் நடிகை அதிர்ச்சியடைந்து சில நொடிகள் உறைந்து போனார். ஆனால், அந்த ரசிகையோ எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து சென்றுவிட்டார்.இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பொது இடங்களில் திரைப் பிரபலங்களின் தனிப்பட்ட எல்லையை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.