ஜெகன்நாத் ரத யாத்திரையின்போது ஜப்பான் ஓபன் தொடரை வென்றது மகிழ்ச்சி - பிவி சிந்து
ஜெகன்நாத் ரத யாத்திரையின்போது ஜப்பான் ஓபன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது: பி.வி. சிந்துஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மகிழ்ச்சியை இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து பகிர்ந்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜெகன்நாத் ரத யாத்திரை நடைபெற்ற புனிதமான காலத்தில் இந்த வெற்றியைப் பெற்றது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த சாதனை தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், தமக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கிய ரசிகர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தனது அணியினருக்கு மனமார்ந்த நன்றியை பி.வி. சிந்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி, எதிர்கால போட்டிகளில் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கான ஊக்கத்தை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.