சபரிமலையில் ஆடி மாத பூஜை: இன்று மாலை நடை திறப்பு
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாத பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறக்கும் நிகழ்வை மேற்கொள்வார்.நாளை முதல் ஜூலை 21-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் வழக்கமான மாத பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. பக்தர்கள் தரிசனத்திற்கு முன்கூட்டியே ஆன்லைன் மூலம் பதிவு செய்து வரலாம்.