Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 15 செப்டம்பர் 2026 | 30 ஆவணி பராபவ வருடம்

சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் அடித்து கொலை; 6 பேரிடம் தீவிர விசாரணை

சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் அடித்து கொலை; 6 பேரிடம் தீவிர விசாரணை

சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறில் அரசு போக்குவரத்துக்கழக பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ராஜ்பந்தமதி விநாயகர் ஆலயத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விழாவைத் தொடர்ந்து மாலை விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலம் சென்றபோது இருதரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது அரசு போக்குவரத்துக்கழக பேருந்து ஓட்டுநர் சீனிவாசன் சரமாரியாக தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தார்.

Advertisement
அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமாபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிய அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு