சட்டசபையில் இயக்குநர் பாக்யராஜ், பாடகி எஸ். ஜானகி உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம்
தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் சட்டசபையில் முன்வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் தொடர்பான பொது விவாதம் இன்று (ஆகஸ்ட் 7) தொடங்கியது.
காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாசித்தார்.
அந்த தீர்மானத்தில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ், எழுத்தாளர்கள் புவியரசு மற்றும் பூமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுருளிவேல், பிரபல பின்னணிப் பாடகி எஸ்.
ஜானகி உள்ளிட்டோர் நினைவுகூரப்பட்டனர். அவர்களின் மறைவுக்கு தமிழக சட்டசபையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலும் பதிவு செய்யப்பட்டது.இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட பிறகு, அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தி, மறைந்தோருக்கு மரியாதை செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து சட்டசபை நடவடிக்கைகள் வழக்கம்போல் தொடர்ந்ததுடன், பட்ஜெட் மீதான பொது விவாதமும் ஆரம்பமானது.