சட்டசபையில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்... என்னென்ன?
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. கூட்டம் ஆரம்பமானதும், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற உள்ளது.இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை முன்வைக்க உள்ளனர்.இதனைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் என்.
ஆனந்த் மற்றும் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர்.இறுதியாக, தாங்கள் பொறுப்பு வகிக்கும் துறைகள் தொடர்பான புதிய அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிட உள்ளனர்.