Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: 3 இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குமா இந்திய அணி?

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: 3 இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குமா இந்திய அணி?
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இலங்கை லெவன் அணியை வீழ்த்திய இந்திய வீரர்கள், டெஸ்ட் போட்டிக்கான தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.காலேவில் நடைபெறும் முதல் டெஸ்டில் இந்திய அணி 3 இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளதாக பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “குல்தீப் யாதவ் ஆக்ரோஷமான முறையில் பந்துவீசக்கூடியவர். அவரது அனுபவத்தையும் திறமையையும் நாம் புறக்கணிக்க முடியாது. மானவ் சுதர் பந்தை அதிகமாக சுழற்றும் திறன் கொண்டவர்.
Advertisement
ரவீந்திர ஜடேஜா துல்லியமாக பந்துவீசுபவர். மூவருமே வெவ்வேறு விதமான பந்துவீச்சு பாணியைக் கொண்டுள்ளனர். இந்த மூன்று இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களையும் சேர்த்து விளையாடச் செய்தாலும் அது எங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்காது. கேப்டன் சுப்மன் கில் அவர்களை எந்த நேரத்தில் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதுதான் முக்கியம். திறமையைப் பொறுத்தவரை, எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றும் திறன் அவர்களுக்கு உள்ளது. காலே ஆடுகளத்தின் பாரம்பரிய தன்மையை கருத்தில் கொண்டால், 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது சரியான அணுகுமுறையாக இருக்கலாம். போட்டியின் சூழ்நிலையை புரிந்துகொண்டு அதற்கேற்ப விரைவாக முடிவெடுக்க வேண்டும்” என்றார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு