மேற்கு வங்காள முதல்-மந்திரி சென்ற ஹெலிகாப்டர் திடீர் அவசர தரையிறக்கம்
மேற்கு வங்காள முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி, மதினிப்பூர் மாவட்டம் கேஷ்பூரில் நடைபெற இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஹிதிராம் போசின் நினைவிட அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டார்.தும்தும் நகரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேஷ்பூருக்கு அவர் பயணம் மேற்கொண்டார். நடுவானில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பலத்த காற்றுடன் வானிலை மோசமடைந்தது.இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹெலிகாப்டரை விமானி கொல்ஹட் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் அவசரமாக தரையிறக்கினார்.
இந்த சம்பவத்தில் முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி உள்ளிட்ட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.பின்னர், கேஷ்பூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுவேந்து அதிகாரி காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.