மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: 91.50 அடியாக குறைந்த நீர்மட்டம் – டெல்டா பாசனத்திற்கு 12,000 கன அடி தண்ணீர் திறப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வந்து சேரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4,822 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. வரத்து குறைந்து வரும் நிலையில், பாசனத்திற்காக அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன்படி, இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.50 அடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 54.38 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவையை கருத்தில் கொண்டு, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.