மதுரை: 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது
மதுரை அருகே உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவிகளிடம் நேரடியாகவும், செல்போன் மூலமாகவும் ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சில மாணவிகள் மாவட்ட கலெக்டரிடம் ரகசியமாக புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆசிரியர் ராஜ்குமார், விடுதி வார்டன் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.