Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 18 ஆகஸ்ட் 2026 | 2 ஆவணி பராபவ வருடம்

பொறியியல் கலந்தாய்வு: 2 சுற்றுகளில் 86,802 இடங்கள் நிரம்பின!

பொறியியல் கலந்தாய்வு: 2 சுற்றுகளில் 86,802 இடங்கள் நிரம்பின!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த ஜூலை 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.இதில் முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 3-ந்தேதி நிறைவடைந்தது. பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீடு ஆகிய இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 26,851 இடங்கள் நிரப்பப்பட்டன.இதைத்தொடர்ந்து நடைபெற்ற 2-வது சுற்று கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது.
Advertisement
இந்த சுற்றில் இரு பிரிவுகளிலும் சேர்த்து 59,951 இடங்கள் நிரம்பின.இதன் மூலம் முதல் மற்றும் 2-வது சுற்று கலந்தாய்வு முடிவில், மொத்தமுள்ள 1,96,077 இடங்களில் 86,802 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,09,275 இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது.இந்த கலந்தாய்வில்பங்கேற்கமொத்தம்1,30,761மாணவர்கள்அழைக்கப்பட்டுள்ளனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு