மாவீரர் பூலித்தேவரின் 311-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்திய விடுதலைக்காக தென்பகுதியில் இருந்து துணிச்சலுடன் போராடிய மாவீரர் பூலித்தேவரை நினைவுகூர்ந்துள்ளார்.இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீர முழக்கம் எழுப்பியதுடன், போர்க்களத்தில் எதிரிகளால் எளிதில் வீழ்த்த முடியாத வீரராக பூலித்தேவர் திகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
மேலும், வீரத்தில் மட்டுமின்றி இறைபணியிலும் சிறந்து விளங்கிய மாமன்னர் பூலித்தேவரின் வீரத்தையும் தியாகத்தையும் அவரது பிறந்தநாளில் போற்றி வணங்குவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.மேலும், நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதாகவும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.