தென் ஆப்பிரிக்கா: சட்டவிரோத அகதிகளை வெளியேற்றக்கோரி தொடரும் போராட்டம்...
தென் ஆப்பிரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல நகரங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வேலைவாய்ப்பு, குற்றச்செயல்கள் மற்றும் பொதுச் சேவைகளின் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளதாகக் கூறும் போராட்டக்காரர்கள், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சில பகுதிகளில் போராட்டங்கள் பதற்றமாக மாறிய நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த சில வெளிநாட்டு குடியேறிகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சட்டத்தை கையில் எடுத்து செயல்பட வேண்டாம் என்றும், குடியேற்றப் பிரச்சினைக்கு சட்டரீதியான தீர்வுகள் மட்டுமே ஏற்றவை என்றும் தென் ஆப்பிரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.