Skip to main content
🌤️ —°C
சனி | 01 ஆகஸ்ட் 2026 | 16 ஆடி பராபவ வருடம்

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுமா? அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு: டி.கே. சிவக்குமார்

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுமா? அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு: டி.கே. சிவக்குமார்
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதுகுறித்து கர்நாடக அரசு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நடத்தியது.இந்தக் கூட்டத்தில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜனீஸ், கூடுதல் தலைமைச் செயலாளர் கவுரவ் குப்தா, மாநில போலீஸ் டி.ஜி.பி. எம்.ஏ. சலீம், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு, நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவக்குமார், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார். கடந்த 2016, 2017, 2018 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிலும் இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் நல்ல மழை காரணமாக அணைகள் நிரம்பி, தமிழகத்தின் தேவையை விட அதிக அளவு தண்ணீர் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.2025-ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு 400 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டதாகவும், அதில் பெரும்பகுதி கடலில் கலந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைப்படி 3,500 கனஅடி தண்ணீர் திறக்க இயலாது என தெரிவித்து, நீர் திறப்பின் அளவை குறைத்து உத்தரவை ஒத்திவைக்கக் கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ததாகவும் விளக்கினார்.ஆனால், தமிழக அதிகாரிகள் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து ஆணையம் தனது உத்தரவை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.தற்போது ஹாரங்கி அணையில் 95 சதவீதம், கபினியில் 83 சதவீதம், கே.ஆர்.எஸ். அணையில் 36 சதவீதம் மற்றும் ஹேமாவதி அணையில் 67 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாக அவர் கூறினார்.
Advertisement
மேலும், 15 நாட்களுக்கு மொத்தம் 4½ டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், அணைகளுக்கான நீர்வரத்து தற்போது வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்திருப்பது ஓரளவு நம்பிக்கையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.கர்நாடகத்தின் நலனை பாதுகாக்கும் நோக்கில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன் மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, சோமண்ணா மற்றும் ஷோபாவுக்கு அந்த அறிக்கையை அனுப்பியதாகவும், அவர்கள் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடம் இந்த விவகாரத்தில் வலியுறுத்தியதாகவும் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.தமிழகம் 9.94 டி.எம்.சி. தண்ணீர் கோரிய நிலையில், அதன் சுமார் 50 சதவீதத்தை திறக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த மூன்று நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ள சூழலில், ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.மேலும், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜனதா எம்.பி.க்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெறும் 0.6 டி.எம்.சி. தண்ணீரே தமிழகத்தை சென்றடைந்துள்ளதாகவும் கூறினார். இதுவரை தமிழகத்துக்கு சென்ற நீர் கர்நாடக அரசு திறந்துவிட்டது அல்ல; மழை காரணமாக இயற்கையாக சென்ற நீர்தான் என்றும் அவர் விளக்கமளித்தார்.இதற்கிடையில், அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவதாகவும், ஆகஸ்ட் 13-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்போவதாக சில கன்னட அமைப்புகள் அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசு ஏற்கனவே மாநிலத்தின் நலனுக்காக செயல்பட்டு வரும் நிலையில், முழு அடைப்பு தேவையற்றது என்றும், அதனால் எந்தத் தீர்வும் கிடைக்காது என்றும் டி.கே. சிவக்குமார் கூறினார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு