Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | 28 ஆவணி பராபவ வருடம்

சென்னையில் நள்ளிரவில் பலத்த மழை; 15 விமானங்கள் தாமதமாக இயக்கம்

சென்னையில் நள்ளிரவில் பலத்த மழை; 15 விமானங்கள் தாமதமாக இயக்கம்

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பாதையின் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மாலை முதல் இரவு வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று மாலை தொடங்கி நகரின் பல பகுதிகளில் இடைவிடாமல் மழை பதிவானது.அடையாறு, மயிலாப்பூர், தாம்பரம், பெருங்குடி, தரமணி, கிண்டி, வேளச்சேரி, பல்லாவரம், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து, நகரம் முழுவதும் குளிர்ச்சியான வானிலை நிலவியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.மீனம்பாக்கம் பகுதியில் பெய்த கனமழையின் தாக்கம் சென்னை விமான நிலைய சேவையையும் பாதித்தது.

Advertisement
இதன் காரணமாக மொத்தம் 15 விமானங்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டது. அபுதாபி, டெல்லி, கவுகாத்தி, கோவை, திருச்சி மற்றும் மும்பையில் இருந்து வந்த விமானங்கள் உடனடியாக தரையிறங்க முடியாததால், சில நேரம் வானில் சுற்றிவிட்டு பின்னர் தரையிறக்கப்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து டெல்லி, பெங்களூரு, மும்பை, அபுதாபி உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் திட்டமிட்ட நேரத்தை விட தாமதமாக புறப்பட்டன.இதற்கிடையே, இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு