சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசி இயக்கத்தின் முக்கிய முன்னோடியுமான வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்-அமைச்சர் விஜய் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் துணிச்சலுடனும் தியாக மனப்பான்மையுடனும் போராடி, மக்களிடையே சுதேசி சிந்தனையை வளர்த்த வ.உ.சிதம்பரனாரை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளார்.ஆங்கிலேய ஆட்சியிலிருந்து அரசியல் சுதந்திரம் பெறுவது மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியிலும் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் வ.உ.சிதம்பரனார் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
இதற்காக சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களிடையே தன்னம்பிக்கை மற்றும் சுயசார்பு எண்ணத்தை உருவாக்கியதுடன், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் அவர் குரல் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.நாட்டின் விடுதலை, சுதேசி உணர்வு மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகள் ஆகியவற்றுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் அனைவரும் நினைவுகூர்ந்து போற்ற வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.