வர்த்தகத்தை மேம்படுத்த புதிய திட்டம்: கேரளத்தில் தேங்காய் பூங்கா!
ஏற்றுமதிக்கு ஏற்ற தரமான பொருட்களையும், மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளையும் உருவாக்கும் நோக்கில் கேரளத்தில் தேங்காய் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி சதீசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:வரலாற்று காலம் முதலே தேங்காய் சாகுபடியில் கேரளம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆனால், தற்போது தேங்காய் உற்பத்தியில் மாநிலம் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனால், கேரளத்தின் தேங்காய் சார்ந்த தொழில் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.தேங்காயை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பதப்படுத்தி, உயர்தர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம் ஏற்றுமதி சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.தேங்காய் பூங்கா அமைக்கும் திட்டம் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.