ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நீட் தேர்வுக்காக தேர்வு மையங்களை தேடும் தேசிய தேர்வு முகமை
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, தொடர்ந்து பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கி வருகிறது. இதையடுத்து, அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த தேசிய தேர்வு முகமை (NTA) திட்டமிட்டுள்ளது.இதற்கான முன்னேற்பாடாக, கணினி வசதிகளுடன் கூடிய தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை தற்போது தேடி வருகிறது. குறிப்பாக, அரசு நிறுவனங்களிடம் உள்ள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை பயன்படுத்துவதற்காக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (AICTE) உதவியை தேர்வு முகமை நாடியுள்ளது.இதுகுறித்து தேர்வு முகமை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தனியார் நிறுவனங்களிடமிருந்து கணினி அடிப்படையிலான தேர்வு மையங்களை பெறுவது சாத்தியமில்லை.