Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நீட் தேர்வுக்காக தேர்வு மையங்களை தேடும் தேசிய தேர்வு முகமை

ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நீட் தேர்வுக்காக தேர்வு மையங்களை தேடும் தேசிய தேர்வு முகமை

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, தொடர்ந்து பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கி வருகிறது. இதையடுத்து, அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த தேசிய தேர்வு முகமை (NTA) திட்டமிட்டுள்ளது.இதற்கான முன்னேற்பாடாக, கணினி வசதிகளுடன் கூடிய தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை தற்போது தேடி வருகிறது. குறிப்பாக, அரசு நிறுவனங்களிடம் உள்ள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை பயன்படுத்துவதற்காக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (AICTE) உதவியை தேர்வு முகமை நாடியுள்ளது.இதுகுறித்து தேர்வு முகமை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தனியார் நிறுவனங்களிடமிருந்து கணினி அடிப்படையிலான தேர்வு மையங்களை பெறுவது சாத்தியமில்லை.

Advertisement
எனவே, கடுமையான விதிமுறைகள் மற்றும் தரநிலைகளின் அடிப்படையில் மையங்களை ஆய்வு செய்து தேர்வு செய்ய வேண்டியுள்ளது.ஏ.ஐ.சி.டி.இ. கட்டுப்பாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட ஏராளமான தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. இதனால், அந்தக் கல்லூரிகளின் விவரங்களை வழங்குமாறு ஏ.ஐ.சி.டி.இ.யிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு