முதல்-அமைச்சர் விஜய்யின் கர்நாடக பயணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை: டி.கே. சிவக்குமார்
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக மாநில நீர்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் முக்கிய தகவல்களை பகிர்ந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
"நானும் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யும் தத்தமது மாநில மக்களின் நலனையே முன்னிலைப்படுத்தி செயல்பட்டு வருகிறோம். இரு மாநிலங்களின் தற்போதைய நிலை குறித்து தொலைபேசி மூலம் பரஸ்பரம் கலந்துரையாடினோம். முதல்-அமைச்சர் விஜய் 3-ஆம் தேதி கர்நாடகத்திற்கு வர திட்டமிட்டிருந்தார். ஆனால் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக அவரது பயணம் இதுவரை உறுதியாகவில்லை.தமிழகத்திற்கு ஏற்கெனவே திறந்து விடப்பட்ட நீர் கடலில் கலந்துவிட்டது. 177 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டியிருந்த நிலையில், அதைவிட அதிகமாக 400 டி.எம்.சி.க்கும் மேற்பட்ட நீரை கர்நாடகம் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு மாநிலத்தில் நல்ல மழைப்பொழிவு கிடைத்ததால், தமிழகத்திற்குத் தேவையான அளவில் நீர் வழங்க முடிந்தது.தற்போது கர்நாடக அணைகளுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. போதிய அளவு நீர் இருப்பு இல்லை என்று தெரிவித்தபோதும், அந்த விளக்கத்தை ஆணையம் ஏற்கவில்லை.இத்தகைய நெருக்கடியான சூழலில் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்ற எங்கள் நிலைப்பாட்டை ஆணையத்திடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். மேலும், தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்."