மீண்டும் சீற்றம் காட்டிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை; விமானப் போக்குவரத்து பாதிப்பு
இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள மவுண்ட் எட்னா, ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையாகக் கருதப்படுகிறது. அடிக்கடி செயல்பட்டு வரும் இந்த எரிமலை, கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலும் வெடித்து சாம்பலை பல கிலோமீட்டர் தொலைவு வரை பரவச் செய்தது.இந்த நிலையில், எட்னா எரிமலை தற்போது மீண்டும் வெடித்துள்ளது. இதனால் எரிமலையில் இருந்து தீக்குழம்புகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன.
மேலும், மலையின் உச்சிப் பகுதியில் இருந்து கொதிக்கும் நிலையில் உள்ள பாறைகள் மற்றும் கற்கள் கீழ்நோக்கி உருண்டு வருகின்றன.எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் அடர்ந்த புகை காரணமாக சிசிலி விமான நிலையத்தின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, அப்பகுதிக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.