பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது: இந்தியாவுக்கு பெருமை என எல்.முருகன் பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய அரச விருதான ‘ஒலிய தராஜலி தோஸ்த்லிக்’ விருது வழங்கப்பட்டுள்ளதற்கு மத்திய இணை-மந்திரி எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த அங்கீகாரம் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தருணம் என குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து வலுப்பெற்று வரும் நட்பு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் உத்திசார் ஒத்துழைப்பை இந்த விருது வெளிப்படுத்துவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.மேலும், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமைத்துவத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெற்று வருவதை இந்த கவுரவம் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உயரிய அங்கீகாரம் ஒவ்வொரு இந்தியருக்கும் மிகுந்த பெருமிதத்தை அளிக்கும் தருணம் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.