நீலகிரி மாவட்டத்தின் இரண்டு வெவ்வேறு வனப்பகுதிகளில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 2 புலிகளின் உடல்களை, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வனத்துறையினர் தீயிட்டு அழித்தனர்.ஊட்டி அருகிலுள்ள மார்லிமந்து அணை காப்புக்காடு பகுதியில், உடல் அழுகிய நிலையில் ஒரு புலி நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், பைக்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட நடுவட்டம் காப்புக்காடு பகுதியில் மற்றொரு பெண் புலியும் இறந்து கிடந்தது.இந்த இரண்டு புலிகளும் எவ்வாறு உயிரிழந்தன என்பது குறித்து இதுவரை தெளிவான காரணம் தெரியவில்லை.
Advertisement
இதையடுத்து, அவற்றின் உடலிலிருந்து தேவையான உறுப்புகள் மற்றும் மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டன.பின்னர், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நடைமுறைகளைப் பின்பற்றி, இரண்டு புலிகளின் உடல்களையும் வனத்துறையினர் தீ வைத்து எரித்து அகற்றினர்.