நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து தினமும் காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்: 16321), வருகிற 19, 21 மற்றும் 22-ந்தேதிகளில் விருதுநகருக்குப் பிறகு வழக்கமான பாதையில் செல்லாது. அதற்கு பதிலாக மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக கரூர் சென்று அங்கிருந்து கோவையை சென்றடையும். இதனால் அந்த 3 நாட்களிலும் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல்ரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல், எரியோடு மற்றும் பாளையம் ஆகிய நிலையங்கள் வழியாக இந்த ரெயில் இயக்கப்படாது.