Skip to main content
🌤️ —°C
வியாழன் | 20 ஆகஸ்ட் 2026 | 4 ஆவணி பராபவ வருடம்

த.வெ.க. ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்திற்கு ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் வன்னி அரசு

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்றது. மலேசியாவில் படித்து வரும் மாணவர் ஒருவர், திட்டத்தின் கீழ் தனக்கு வழங்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்கு சமூகநலத்துறை அமைச்சர் வன்னி அரசு விளக்கம் அளித்தார்.மாணவரின் கல்வி நலனுக்காக இதுவரை ரூ.48.22 லட்சம் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நடப்பு ஆண்டுக்கான உதவித்தொகையை பெற தேவையான ஆவணங்களை மாணவர் சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் கூறினார். குறிப்பாக, முதல் ஆண்டு கல்விக் கட்டணமாக வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்திற்கான ஆவணங்கள் 10 மாதங்களாக சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.மேலும், அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில் தற்போது மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக வன்னி அரசு கூறினார்.
Advertisement
தி.மு.க. ஆட்சியில் இத்திட்டத்திற்காக ரூ.84 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், த.வெ.க. ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த அனைத்து தகுதியான மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு