வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வரும் டிசம்பர் மாதத்தில் நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சட்ட நடைமுறைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் சட்டப்படி விளக்கம் அளிக்க விருப்பம் இருப்பதாகவும், சட்டத்தின் முன் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Advertisement
அதேசமயம், ஹசீனா நாடு திரும்பும் சூழல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து வங்காளதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.