டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு: 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வின் மூலம் அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர், டெபுடி கமர்ஷியல் டேக்ஸ் ஆபீசர், ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் ஆபீசர், புரபேஷன் ஆபீசர், சப்-ரிஜிஸ்டிரார் கிரேடு-II, ஜெயிலர், ஸ்பெஷல் அசிஸ்டென்ட், ஸ்பெஷல் பிராஞ்ச் அசிஸ்டென்ட், ஸ்டோர்கீப்பர், அசிஸ்டென்ட் செக்ஷன் ஆபீசர், சீனியர் இன்ஸ்பெக்டர், ஆடிட் இன்ஸ்பெக்டர், கைத்தறி இன்ஸ்பெக்டர், சூபர்வைசர்/இளநிலை கண்காணிப்பாளர், சீனியர் ரெவினியூ இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும், அசிஸ்டென்ட் பணிக்கு 686 இடங்களும், அக்கவுன்டென்ட் பணிக்கு 31 இடங்களும், எக்சிக்யூட்டிவ் ஆபீசர் கிரேடு-III பணிக்கு 9 இடங்களும், எக்சிக்யூட்டிவ் ஆபீசர் கிரேடு-II பணிக்கு ஒரு இடமும், லோயர் டிவிசன் கிளார்க் பணிக்கு 20 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் அக்கவுன்டென்ட் மற்றும் ஆண் வார்டன் உள்ளிட்ட பணிகளும் இதில் அடங்கும். கல்வித்தகுதி: அசிஸ்டென்ட் செக்ஷன் ஆபீசர் பணிக்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜெனரல் லா பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் அல்லது ஏதேனும் ஒரு பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சப்-ரிஜிஸ்டிரார் கிரேடு-II பணிக்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பி.எல். பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்க தகுதியாகும். ஸ்பெஷல் பிராஞ்ச் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு பயிற்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மற்ற பணிகளுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.