சென்னை திருவொற்றியூர் மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில், சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கண்டறிந்து கைது செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Advertisement
இதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு மட்டும் சுமார் 70 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். சிறப்பு கண்காணிப்பின் அடிப்படையில், நேற்று இரவு முதல் ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் ஆஜராகாமல் இருந்தவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.