நாகர்கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நடிகரும், பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்திய அவர், பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மணமக்களுடன் இணைந்து ஏழை மக்களுக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்கள் சரத்குமாரிடம் தமிழக அரசின் செயல்பாடுகள் தொடர்பாக கேள்வி எழுப்பினர். குறிப்பாக, தமிழக முதல்-அமைச்சர் விஜய் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளதாக கூறியிருப்பது குறித்து அவரது கருத்து என்ன என்று கேட்டனர்.
Advertisement
இதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் அங்கிருந்து நகர்ந்து சென்ற சரத்குமார், “நான் தற்போது அரசியலில் இல்லை; ஒதுங்கி இருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பதிலளிக்க பலர் இருப்பதாகவும், “மாநில தலைவர் இருக்கிறார்; அவர் பதில் அளிப்பார்” என்றும் கூறிவிட்டு சென்றார். சரத்குமாரின் இந்த பதில் அங்கு இருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.