Skip to main content
🌤️ —°C
புதன் | 26 ஆகஸ்ட் 2026 | 10 ஆவணி பராபவ வருடம்

மின்சார பேருந்து சேவை; முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்

மின்சார பேருந்து சேவை; முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
சென்னையில் 2-ம் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள 750 புதிய ஏ.சி. மின்சார பேருந்துகளின் சேவையை முதல்அமைச்சர்விஜய்இன்று(செவ்வாய்க்கிழமை)தொடங்கிவைத்தார்.சென்னையில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏற்கனவே முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பில் 625 தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகின்றன.இதன் தொடர்ச்சியாக, 2-ம் கட்டத்தில் 750 புதிய தாழ்தள குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Advertisement
ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அங்கு மின்சார பேருந்துகளின் சேவையை முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலாளர் சாய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மின்சார ஏ.சி. பேருந்தில் பயணம் செய்த முதல்-அமைச்சர் விஜய், அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கலந்துரையாடினார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு