மதுரையில் இந்தியத் திருநாட்டின் 80 - வது சுதந்திர தின முன்னிட்டு மாபெரும் நலத்திட்டம் வழங்கும் விழா!
இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனியார்மண்டபத்தில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக நலிந்த நாடக கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பாராட்டுவிழாவில், சிறப்பு விருந்தினராக "ஸ்டார் குரு சாரிட்டபிள் பவுண்டேஷன்" நிறுவனத் தலைவர் "ஸ்டார் குரு" அவர்கள் கலந்து கொண்டு நலிந்த நாடக கிராமிய கலைஞர்கள் 200-க்கும் மேற்பட்டோருக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
உடன் மத்திய அரசு வழக்கறிஞர் அன்பு மணிகண்டன் தமிழ் சூரியன்BABL, தென்னிந்திய திரைப்பட இயக்குனர் மாநில செயலாளர் கே.கதிரவன்,
தென்னிந்திய திரைப்பட இயக்குனர் மாநில செயற்குழு உறுப்பினர் T.அழகர்சாமி,
உதவி இயக்குனர் ராஜன், சமூக ஆர்வலர் கோபிநாத் பங்கேற்றனர்மேலும் அவர்களுக்கு மதிய உணவையும் ஸ்டார் குரு அவர்கள் வழங்கினார்கள். விருதுகளையும் நலத்திட்ட உதவிகளையும் பெற்றுக் கொண்ட கலைஞர்கள் அனைவரும் நன்றி கூறி விழாவினை
சிறப்பித்தனர்.