மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜா என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அலுவலகத்தில் மனு அளித்தார் மனுவில் கூறி இருப்பதாவது
நான் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கீரனூர் கிராமத்தில் ஆதிக்க ஜாதிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் என்னை உயிர் போகும் நிலையில் வெட்டிக்கொலை செய்யும் முயற்சியில் வெட்டியதில் எனக்கு வலது பின்கை துண்டிக்கப்பட்ட நிலையில் என்னால் எதுவும் செய்யப்பட இயலாமல்ஊரில் குடும்பத்துடன் குடியிருக்க இயலாமல் வெளியிடத்தில் வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். மேலும் உயிருக்கு பயந்து ஊரைவிட்டு ஒதுங்கி வாழ்ந்து வருகிறேன். மேலூர் கிராமம் (நகரில்) அரசு புல ஒதுக்கீடு வழங்கிய 85 பிளாட்டுகள் நீங்கலாக உள்ள புலம் காலி வீட்டு மனையாக அரசு பொறுப்பில் இருந்து வருகிறது.பாதிப்புற்ற, ஊனமுற்ற எனக்கு குடியிருப்புக்கு அரசு ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கிக்கொடுத்த புலத்தில் அரசு பொறுப்பில் இருந்து வரும் பிளாட்டுகளான 81,82,83,84,85 க்கும் தெற்கே உள்ள காலிமனையிடத்தை எனக்கு அரசு வீட்டு மனைப்பட்டு வழங்க சமூகம் தக்க பரிந்துரைத்து எனக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிட பணிவுடன் வேண்டுகிறேன். என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.