ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக கண்ணூருக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கும் வகையில், பெங்களூருவில் இருந்து கேரள மாநிலத்தின் கண்ணூருக்கு சிறப்பு ரெயிலை ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்த சிறப்பு ரெயில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.50 மணிக்கு கண்ணூரை சென்றடையும்.வழித்தடத்தில் இந்த ரெயில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி அதிகாலை 2.10 மணிக்கு சேலம், 3.15 மணிக்கு ஈரோடு, 4.03 மணிக்கு திருப்பூர் மற்றும் 5.48 மணிக்கு போத்தனூர் ஆகிய நிலையங்களை அடையும்.அதேபோல், கண்ணூரில் இருந்து ஆகஸ்ட் 21-ஆம் தேதி மாலை 4.10 மணிக்கு மற்றொரு சிறப்பு ரெயில் புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும்.இந்த ரெயில் இரவு 9.40 மணிக்கு போத்தனூர், 10.28 மணிக்கு திருப்பூர், 11.15 மணிக்கு ஈரோடு மற்றும் நள்ளிரவு 12.05 மணிக்கு சேலம் ஆகிய நிலையங்களை வந்தடையும் என்று ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.