# ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சன்னதியில் ஆடிப்பூர உற்சவம்: 6-ம் நாளில் அழகர் திருக்கோல சேவை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டாள் நாச்சியாரை முன்னிட்டு நடைபெறும் திரு ஆடிப்பூர உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவிலில் அமைந்துள்ள பரமபத நாதர் சன்னதியில் நடைபெறும் இந்த உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் ஆண்டாள் நாச்சியார் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அதன்படி, ஆடிப்பூர உற்சவத்தின் 6-ம் நாளான இன்று (10.08.2026), மூலவர் திருமாலிருஞ்சோலை பரம சுவாமி திருக்கோலத்திலும், உற்சவர் அழகர் திருக்கோலத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
இந்த சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் நாச்சியாரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.இதனிடையே, ஸ்ரீரங்கம் மேல அடையவளஞ்சான் வீதியில் உள்ள ஸ்ரீ வெளி ஆண்டாள் சன்னதியிலும் ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.