தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், சென்னையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும். வரும் 9-ந்தேதி நடைபெற உள்ள கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், தவெக தலைமையிலான கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான விவாதம் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டது.
Advertisement
முடிந்துபோன விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டிய அவசியமில்லை. ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதைத் தவிர கூறுவதற்கு வேறு எதுவும் இல்லை. என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.