பராமரிப்பு பணி: கோவை - நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16322) குறிப்பிட்ட நாட்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 8, 10, 12 ஆகிய தேதிகளில் வழக்கமான பாதையில் இயக்கப்படாது. அதன்படி, கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பகுர், கொடுமுடி, புகலூர், கரூர் பாளையம், எரியோடு ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக இந்த ரெயில் செல்லாது.