பிரிட்டனின் முதல் ஏஐ துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. கனிஷ்கா நாராயண் நியமனம்
பிரிட்டன் பிரதமராக இருந்த கீர் ஸ்டார்மர் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக பொறுப்பேற்ற ஆன்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சரவை பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்த அமைச்சரவையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிஷ்கா நாராயண், நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவையின் முக்கிய உறுப்பினர்கள்: எட் மிலிபண்ட் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் – உள்துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங்– பாதுகாப்புத்துறை அமைச்சர் யுவெட் கூப்பர் – சுகாதாரத்துறை அமைச்சர் லூசி பவல்– கல்வித்துறை அமைச்சர் ஏஞ்சலா ரேனர் – வீட்டுவசதி துறை அமைச்சர் கனிஷ்கா நாராயண் – ஏஐ (செயற்கை நுண்ணறிவு) துறை அமைச்சர் பீஹாரில் பிறந்த கனிஷ்கா நாராயண், சிறுவயதிலேயே குடும்பத்துடன் கார்டிப் நகருக்கு குடிபெயர்ந்தார்.