Skip to main content
🌤️ —°C
வியாழன் | 27 ஆகஸ்ட் 2026 | 11 ஆவணி பராபவ வருடம்

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.19 கோடி

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.19 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.நேற்று கோவிலில் 77 ஆயிரத்து 568 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் 35 ஆயிரத்து 33 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவில் உண்டியல் மூலம் ரூ.4 கோடியே 19 லட்சம் காணிக்கை கிடைத்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.மேலும், நேற்று மட்டும் 4 லட்சத்து 15 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
Advertisement
2 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 497 பேர் சிகிச்சை பெற்றனர்.தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய சுமார் 22 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு