சென்னை முதல் செங்கோட்டை வரை... 23-வது ஆண்டில் தடம் பதிக்கும் பொதிகை எக்ஸ்பிரஸ்!
சென்னை எழும்பூர் முதல் செங்கோட்டை வரை இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 22 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 23-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி பொதிகை எக்ஸ்பிரஸ் தனது முதல் பயணத்தை தொடங்கியது. அன்றுமுதல் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளுக்கு முக்கியமான ரெயில் சேவையாக இது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் பொதிகை எக்ஸ்பிரஸ் நின்று செல்கிறது.