Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 01 செப்டம்பர் 2026 | 16 ஆவணி பராபவ வருடம்

உக்ரைன் மீது ரஷியா கடும் தாக்குதல்: இந்தியர் உள்பட 12 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா கடும் தாக்குதல்: இந்தியர் உள்பட 12 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தொடர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை குறிவைத்து இரவு நேரத்தில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷிய படைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான டிரோன்களை பயன்படுத்தியதாக உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.இந்த தாக்குதலால் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன.

Advertisement
சில பகுதிகளில் தீ விபத்துகளும் ஏற்பட்டதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.தாக்குதலில்12பேர்உயிரிழந்தநிலையில்,மேலும்பலர்காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களில் குழந்தைகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தாக்குதல் உக்ரைன் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் ரஷியாவின் வான்வழித் தாக்குதல்களின் மற்றொரு தீவிரமான கட்டமாக பார்க்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜெலென்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு