வ.உ.சி. 155-வது பிறந்தநாள்: ஓட்டப்பிடாரம் நினைவு இல்லத்தில் அதிமுக சார்பில் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரரும், ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘செக்கிழுத்த செம்மல்’ என போற்றப்படுபவருமான வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவரான வ.உ. சிதம்பரம் பிள்ளை, வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்.அவரது 155-வது பிறந்தநாள் செப்டம்பர் 5, 2026 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள வ.உ. சிதம்பரம் பிள்ளை நினைவு இல்லத்தில் காலை 10.30 மணிக்கு அவரது சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., கழக அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மகளிர் அணி செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர், வர்த்தக அணி செயலாளர் சி.த.