Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 02 செப்டம்பர் 2026 | 17 ஆவணி பராபவ வருடம்

ரூ.1.25 கோடி நன்கொடை... வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ஒலிம்பிக் சாம்பியன்

ரூ.1.25 கோடி நன்கொடை... வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ஒலிம்பிக் சாம்பியன்

சீன டென்னிஸ் வீராங்கனையும் ஒலிம்பிக் சாம்பியனுமான கின்வென் ஜெங், திபெத்-நேபாள எல்லைப் பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என கின்வென் ஜெங் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணப் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பதையும் தொடர்ந்து கவனித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.சீனாவின் திபெத் மற்றும் நேபாள எல்லையையொட்டிய பகுதிகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,500-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கின்வென் ஜெங், தற்போது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு