சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் 109-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக முன்னேற்றத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவருமான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியார், எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகவும் அரசியல் களத்தில் தொடர்ந்து செயல்பட்டார்.
Advertisement
அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று சென்னை கிண்டியில் உள்ள ராமசாமி படையாச்சியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இவ்வாறு டிடிவி தினகரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.