ராஜஸ்தான்: மந்திரிக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி - தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் தொற்றான இது, மனிதர்களிடையேயும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாகும்.இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில வேளாண் மந்திரி கிரோடி லால் மீனாவுக்கு (74) கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கிரோடி லால் மீனாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.