மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், பக்தர்களின் பயண வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இன்று (புதன்கிழமை) மாலை முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தாம்பரத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு மெமு ரெயில், மறுநாள் அதிகாலை 2.20 மணிக்கு மதுரையை சென்றடையும்.
Advertisement
இதன் மறுமார்க்க சேவை நாளை (17-ந்தேதி) மதியம் 2 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். 12 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு மெமு ரெயில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.