புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதி - பிரதமரின் வழிகாட்டுதலுடன் சிறப்பாக செயல்படுவேன்
மத்திய கல்வி அமைச்சராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள பிரகலாத் ஜோஷி, பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலுடன் கல்வித் துறையில் சிறப்பாக செயல்பட உறுதிபூண்டுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தற்போது மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக உள்ள பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறையின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் ஜோஷி, மிகுந்த பணிவுடனும் பொறுப்புணர்வுடனும் இந்த பதவியை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், தம்மீது நம்பிக்கை வைத்து இந்த முக்கிய பொறுப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியையும் தெரிவித்தார்.
பிரதமரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நேர்மையாகவும் முழு அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவேன் என்றும், அவரது வழிகாட்டுதலின் கீழ் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்படுவேன் என்றும் அவர் கூறினார்.
மேலும், கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கையை திறம்பட செயல்படுத்தியதாகவும், அதன் மூலம் நாட்டின் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.